Thursday, January 21, 2016

வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில கிராமத்து வைத்தியங்கள்!


வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள். இவை குடலை இருப்பிடமாக கொண்டு வளரும். இந்த புழுக்களில் பல வகைகள் உள்ளன. அதில் உருளைப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நம் உடலில் புழுக்கள் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வதென்று தெரியுமா? இவை உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். 

அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவை சில நேரங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவை அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்றவை. உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!! எனவே இப்பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை வயிற்றுப்புழுக்களை அழித்து வெளியேற்றும் சில வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும். இங்கு வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கும் சில கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.


வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும்.

மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும்.

பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால், அதனைக் கொண்டு எப்பேற்பட்ட பிரச்சனையையும் சரிசெய்யலாம். அதற்கு தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் 

பாகற்காயை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம்.

எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். 


1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் ரைஸ் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, குடிப்பதன் மூலமும் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதிலும் இச்செயலை ஒரு நாளில் 3-4 டம்ளர் என வாரம் ஒருமுறை குடித்து வர, வயிறு சுத்தமாக புழுக்களின்றி இருக்கும். 


தினமும் 1-2 கிராம்பை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மையினால், புழுக்கள் வெளியேறிவிடும். முக்கியமாக கிராம்பு வளர்ந்த ஒட்டுண்ணிகளை அழிப்பது மட்டுமின்றி, அதன் முட்டைகளையும் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடும்.

Wednesday, January 20, 2016

பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால்?


பரபரப்பான காலத்தில் பலரும் பெரும்பாலும் காலை வேளையில் பிரட்டை தான் காலை உணவாக சாப்பிடுவார்கள். ஏனெனில் பிரட் நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதால் தான். ஆனால் இந்த பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். அதிலும் வெள்ளை பிரட்டை உட்கொண்டு வருபவராயின், உடல் நிலை இன்னும் மோசமாக இருக்கும். வெள்ளை பிரட் சுவையாக இருக்கலாம். ஆனால் அது சுத்திகரிக்கப்பட்ட மாவினால் அதாவது மைதாவால் தயாரிக்கப்படுவதால், அதில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அப்படி சத்துக்களே இல்லாத பிரட்டை உட்கொள்ளும் போது, அதனால் உடல்நிலை தான் மோசமாகும்.

உடல் பருமனடையும் தினமும் காலையில் வெள்ளை பிரட்டை சாப்பிட்டு வந்தால், அதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டானது பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் உட்கொண்டு, உடல் எடை அதிகமாகும்.

சோம்பல் அதிகமாகும் இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும், அதிகப்படியான சோம்பலை உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் காலையில் உட்கொண்ட பிரட் தான் காரணம். எப்படியெனில், பிரட்டை உட்கொண்ட பின்னர் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.

நீரிழிவு வெள்ளை பிரட் நீரிழிவு வரும் வாய்ப்பை அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளை பிரட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். இப்படியே தினமும் உட்கொண்டு வந்தால், அதனால் நாளடைவில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடும். 

மலச்சிக்கலை சந்திக்கக்கூடும் சிலருக்கு பிரட் உட்கொண்ட பின் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து ஏதும் இல்லை. இப்படி நார்ச்சத்து குறைவாக இருப்பதை காலையில் உட்கொண்டால், குடலில் நீர்த்தேக்கம் இல்லாமல் கழிவுகள் இறுக்கமடைந்து வெளியேற முடியாமல் இருக்கும். 

உயர் கொலஸ்ட்ரால் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

ஒருவித எரிச்சலுடன் இருக்கச் செய்யும் ஆம், வெள்ளை பிரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், நீங்கள் மற்றவர்களுடன் எரிந்து விழுவதோடு, அதிக கோபம் அடைவீர்கள். ஏனெனில் தினமும் பிரட்டை உட்கொள்வதால், மூளையில் சுரக்கும் செரடோனின் என்னும் சந்தோஷமான மனநிலையுடன் வைத்துக் கொள்ளும் கெமிக்கல் பாதிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரிக்கும்.


சி அதிகரிக்கும் வெள்ளை பிரட்டில் சத்துக்கள் ஏதும் இல்லாததால், அவற்றை உட்கொள்வதன் மூலம் பசி முற்றிலும் அடங்காது. இதன் காரணமாக பகலில் கண்ட உணவுகளை எப்போதும் உட்கொள்ள நேரிடும்.